வட மாகாணத்தில் பெய்த கடுமையான மழைக்காரணமாக ஏற்பட்ட வைரஸ் தொற்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 23 ஆம் திகதி 9 வயது சிறுமி ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த சிறுமி கடந்த 25 ஆம் திகதி திடீரென மரணத்தை தழுவினார். சிறுமி உயிரிழந்தமைக்கான காரணம் அறியாத வைத்தியர்கள் அவரை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது சிறுமி வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






