உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!!

649

இவ்வருடத்திற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்படமாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதியை விரைவில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் குறித்த பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் பெரும்பாலும் இந்த மாத இறுதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.