ஒன்றரை வயது குழந்தையை இரண்டு மாதங்களாக சிகரட்டால் சூடு வைத்த தாயின் காதலன்!!

515

ஒன்றரை வயது குழந்தையை இரண்டு மாதங்களாக சிகரட்டால் சூடு வைத்து தீகாயங்களை ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் சியம்பலாண்டுவ – முதுகண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் தாயின் கள்ளக்காதலன் மதுபோதையில் இவ்வாறு குழந்தையின் மீது சிகரட்டால் சூடு வைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குழந்தையின் முதுகு பகுதி, கால்கள் மற்றும் மர்ம பகுதியுடன் முகத்திலும் தீ காயங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறு குழந்தையின் உடல் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தீ காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தை சிகிச்சைகளுக்காக சியம்பலாண்டுவ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.