கனேடிய காதலியின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய இலங்கை இளைஞருக்கு நேர்ந்த கதி!!

531

கனேடிய பெண்ணொருவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் 18 இலட்சத்திற்கும் அதிக பணத்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் இணைய ஊடகமொன்றின் பிரபல அறிவிப்பாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கனேடிய பெண்ணுடனான உறவை துண்டித்த பின்னர் பணத்தை திரும்பித் தர நிராகரித்தமையினால் அவர் நேற்று இங்கிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலியின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக தயாரித்து இணையத்தில் பதிவேற்றவுள்ளதாக குறித்த அறிவிப்பாளர், அச்சுறுத்தியதாக தனது முறைப்பாட்டில் பெண் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய கணக்காளருக்கும் அறிவிப்பாளருக்கும் இடையில் முகப்புத்தகம் ஊடாக கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

30 வயதான கணக்காளர் முதலாவது திருமணத்தில் விவாகரத்து பெற்ற ஒரு பிள்ளையின் தாயார் எனவும், அறிவிப்பாளர் 35 வயதான திருமணமானவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.