வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் து.யுகதீஸ்வரன் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை!!

721

 

துரைராஜா யுகதீஸ்வரன்

நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி வர்த்தகப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் துரைராஜா யுகதீஸ்வரன் 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 143வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

                                           துரைராஜா யுகதீஸ்வரன்

மேலும் வர்த்தகப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் சுப்பிரமணியம் கிஷோர் 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் 4ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

                                            சுப்பிரமணியம் கிஷோர்

மாவட்ட ரீதியில் 2ம் இடத்தை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியும் 3ம் இடத்தை வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவனும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட மூன்றுமுறிப்பைச் சேந்த யுகதீஸ்வரனின் தந்தை ஒரு விவசாயி என்பதுடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இம் மாணவன் முதலிடத்தைப் பிடித்து வறுமை என்பது சாதனைக்கு ஓர் தடையல்லை என்பதை நிரூபித்துள்ளதுடன் பல மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கின்றார். சென்ற வருடமும் மூன்றுமுறிப்பைச் சேர்ந்த மாணவனே வர்த்தகப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமைசேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

மேலும் பரீட்சை முடிவுகள் தொடர்பான முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் செய்திகளுடன் இணைந்திருங்கள்.