வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக 3A சித்திகளை பெற்ற மாணவன் : வறுமையிலும் சாதனை!!

886

 

பரராஜசிங்கம் கீர்த்தீசன் 3A

 

நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் மாணவன் பரராஜசிங்கம் கீர்த்தீசன் என்ற மாணவன் கலைப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 1ம் இடத்தைப்பெற்று ஓமந்தை மத்திய கல்லூரி வரலாற்றில் முதல் தடவை 3A சித்திகளைப் பெற்ற மாணவன் என்ற பெருமையையும் சாதனையும் படைத்துள்ளார்.

குறித்த மாணவனின் தந்தை ஓர் விவசாயி என்பதுடன் அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் மாணவனின் தந்தை உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாயின் உழைப்பில் கல்வியை தொடர்ந்த குறித்த மாணவன் வறுமையிலும் தனது பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமைசேர்த்த இம் மாணவனுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

மேலும் பரீட்சை முடிவுகள் தொடர்பான முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் செய்திகளுடன் இணைந்திருங்கள்.