முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி படைத்த சாதனை : குவியும் பாராட்டுக்கள்!!

1104

 

விதுட்ஷா வேலும்மயிலும்

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு முள்ளியவளையில் வித்தியானந்தா கல்லூரியின் மாணவி விதுட்ஷா வேலும்மயிலும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் உயிரியல் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 1ம் இடத்தை பெற்றுள்ளார். இதேவேளை அகில இலங்கை ரீதியில் 72ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் வித்தியானந்தா கல்லூரி மாணவன் தர்மகுலசிங்கம் அபிசாந் உயிரியல் பிரிவில் 2AB பெறுபேற்றினைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் மென்மேலும் சாதனை படைக்க வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.