வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவி ச.டிலாஜினி கலைப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம் பெற்று சாதனை!!

902

 

சண்முகேஸ்வரராஜா டிலாஜினி

நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கலைப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவி சண்முகேஸ்வரராஜா டிலாஜினி 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 35வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

3A சித்திகளையும் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெறவேண்டும் என்ற இலக்குடன் கல்வி கற்றதாகவும் அதேபோன்று சாதித்துக் காட்டியுள்ளதாகவும், தனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் எதிர்காலத்தில் சட்டம் படித்து சட்டத்தரணியாக வருவதே தனது இலட்சியம் என்றும் இம்மாணவி மகிழ்ச்சியுடன் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

மேலும் பரீட்சை முடிவுகள் தொடர்பான முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் செய்திகளுடன் இணைந்திருங்கள்.