வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெ.பூஜிதா கணிதப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம் பெற்று சாதனை!!

665

 

ஜெ.பூஜிதா

நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கணிதப் பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெககுமாரன் பூஜிதா 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 14வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சிறப்பான சித்திகளைப்பெற்று சாதனை படைக்க தனக்கு உதவியாக இருந்த குடும்பத்தினருக்கும் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக இம்மாணவி வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும்பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

மேலும் பரீட்சை முடிவுகள் தொடர்பான முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் செய்திகளுடன் இணைந்திருங்கள்.