வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!!

1130

 

வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயம்

 

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வசதிகள் குறைந்த பிரதேச பாடசாலையான பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து முதல்முறையாக கலைப் பிரிவில் 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி திவானி விஜேந்திரன் 2AB சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 6ம் இடத்தையும், கெளசல்யா உலகநாதன் 2AB சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 7ம் இடத்தையும், யுலக்சனா சதீஷ்குமார் 2AC சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 19ம் இடத்தையும், டனுஷாந்தி கோணேசலிங்கம் A2C சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 25ம் இடத்தையும், பவித்திரா பலராம் ABC சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 51ம் இடத்தையும், பிரியதர்ஷினி பெரியசாமி 2AC சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 79ம் இடத்தையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 5 மாணவர்கள் புவியியல் பாடத்தில் A சித்திகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இவர்களுக்கு கல்வி கற்பித்த புவியியல் ஆசிரியர் சிவானந்தம் கமலேஸ்வரன், தமிழ் ஆசிரியை திருமதி சுஜாதா வாசுதேவன், இந்துநாகரீக ஆசிரியை கலாவதி செல்லத்துரை, தகவல் தொழிநுட்ப ஆசிரியை திருமதி ரேவதி பரமானந்தம், விவசாய தொழில்நுட்ப ஆசிரியை செல்வி ஜெசிக்கா, கிறிஸ்தவ நாகரீக ஆசிரியை திருமதி பெர்னாண்டோ ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

இம் மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.