சிறந்த இலத்திரனியல் பொறியியலாளராகுவதே எனது எதிர்கால இலக்கு : மன்னாரில் முதலிடம் பிடித்த மாணவன்!!

287

 

சிறந்த இலத்திரனியல் பொறியியலாளராகுவதே தனது எதிர்கால இலக்கு என கணித பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மாணவன் எஸ்.அன்று பேடினன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி மாணவன் எஸ்.அன்று பேடினன் கணித பிரிவில் மாவட்ட ரீதியில் முதல் இடத்தினை பெற்றுள்ளார்.

அத்துடன் அன்று பேடினன் தேசிய ரீதியில் 546ஆம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.