வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்டத்தில் மூன்று பிரிவுகளில் முதலிடம்!!

594

 

மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

வெளியாகிய உயர்தரப் பெறுபேற்றில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது என அதிபர் ரி.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

                                                            அ.உதிஸ்டிரன்

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் வவுனியா மாவட்டத்தில் எமது பாடசாலை சிறந்த பெறுபேற்றினை பதிவு செய்துள்ளது.

                                                                 து.யுவதீஸ்வரன்

கலைப்பிரிவில் ச.டிலாஜினி, வர்த்தகப் பிரிவில் து.யுவதீஸ்வரன், விஞ்ஞானப் பிரிவில் அ.உதிஸ்டிரன் ஆகியோர் முதல் நிலைகளை மாவட்ட மட்டத்தில் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார்கள். கடந்த ஆண்டு மாவட்ட மட்டத்தில் முதல்நிலைகளை அடையாத நிலை காணப்பட்ட போதும் இந்த ஆண்டு நாம் அடைந்திருக்கின்றோம்.

                                                                         ச.டிலாஜினி

மாவட்ட மட்டத்தில் முதல் 10 பேரில் உயிரியல் விஞ்ஞானத்துறையில் பிரிவில் 6 பேரையும், கணிதப் பிரிவில் 6 பேரையும், கலைப்பிரிவில் ஒருவரையும், வர்த்தகப் பிரிவில் 4 பேரையும் எமது பாடசாலை கொண்டுள்ளது. இதனால் இந்த அடைவு மட்டம் குறித்து நாம் மகிழ்ச்சியான நிலையில் இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மாவட்ட ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த மாணவர் விபரம் வருமாறு..

 

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமைசேர்த்த மாணவர்கள் அனைவரையும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்..