சிறந்த கணக்காளராக வர வேண்டும் என்பதே எதிர்கால இலக்கு : அன்ரன் பெனில்டஸ்!!

272

சிறந்த கணக்காளராக வர வேண்டும் என்பதே தனது எதிர்கால இலக்கு என வர்த்தகப் பிரிவில் மன்னார் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட மாணவன் ஏ.அன்ரன் பெனில்டஸ் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி மாணவன் செல்வன் ஏ.அன்ரன் பெனில்டஸ் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் மாவட்ட நிலையில் முதலிடத்தினையும், தேசிய ரீதியில் 319ஆம் இடத்தினையும் பெற்று மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதன்போது தனது வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார்.