குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தாயை துடிதுடிக்க கொலை செய்த மகன் எடுத்த சோக முடிவு!!

412

சென்னை தேனாம்பேட்டையில் 22 வயது இளைஞர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கோபத்தால் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடேசன் என்பவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் தாமஸ் சாலையிலேயே தனித்தனியாக வசித்து வருகின்றனர். நடேசனின் இரண்டாவது மனைவி சுந்தரவல்லி(48) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவரது மகன் விக்னேஷ்(22).

சுந்தரவல்லிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அவர் தானாக பேசிக் கொண்டே இருப்பார். இதனால் அருகில் உள்ளவர்கள் யாரும் சுந்தரவல்லி குடும்பத்தினரிடம் இருந்து விலகியே இருந்துள்ளனர்.

தந்தையும் கைவிட்ட நிலையில், மகன் விக்னேஷ் தனது தாய் சுந்தரவல்லியை மருத்துவமனைக்கு அழைத்து ெசன்று சிகிச்சை அளித்து பராமரித்து வந்தார்.

விக்னேஷ் ஐடி நிறுவனத்தில் உணவு விடுதியில் வேலை செய்து வந்தார். மேலும், மாலை நேரத்தில் தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு விக்ேனஷ் பணிமுடிந்து வீட்டிற்கு வந்ததும் தூங்க முயன்றார். அப்போது சுந்தரவல்லி மகன் விக்னேஷை தூங்க விடாமல் எழுப்பியபடியே இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது தாயை தலையணையால் முகத்தை அழுத்தியும், கழுத்தை நெரித்துள்ளார். சுந்தரவல்லி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத விக்னேஷ் அதிர்ச்சியில் அழுது துடித்துள்ளார்.

தனது முன்கோபத்தால் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டோமே என அதிர்ச்சியடைந்த விக்னேஷ், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இறப்பதற்கு முன்பு தனது நண்பர்களுக்கு “நாளை நல்ல செய்தி சொல்கிறேன்” என்று குறுஞ் ெசய்தி அனுப்பி உள்ளார். வழக்கமாக விக்னேஷை வேலைக்கு அழைத்து செல்லும் நண்பர் இரவு 10 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் கதவு திறந்த கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது அவரது தாய் இறந்து கிடந்தார். அருகிலேயே விக்னேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தற்போது இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது