மாணவர்களுக்கு பரீட்சைகளில் மேலதிகமாக 10 புள்ளிகள் : மகிழ்ச்சியான அறிவிப்பு!!

359

ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாடசாலைகளில் அறநெறி வகுப்புக்கள் கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இந்த நடைமுறை பௌத்த மாணவர்களுக்கு மாத்திரம் அல்ல. இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும்.

ஏற்கனவே இதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதற்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

இதேவேளை அறநெறி வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு க.பொ.த சாதாரணத்தர மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் 10 புள்ளிகளை மேலதிக மாகவழங்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உடன்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் பெரேரா தெரிவித்துள்ளார்.