தவறான கூகுள் தேடலினால் 1 லட்சத்தை இழந்த பெண்!!

384

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் 1 இலட்சம் இந்திய ரூபாய்களை கூகுளில் கிடைக்கபெற்ற சில தவறான தகவல்கள் காரணமாக இழந்துள்ளார்.

அவர் தனது e-wallet கணக்கில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முனைந்துள்ளார். எனினும் தொலைபேசி இலக்கம் தெரியாததனால் கூகுளில் தேடியுள்ளார்.

அப்போது கிடைக்கப்பெற்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தனது பிரச்சினையை தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரச்சினையை தீர்ப்பதற்காக அவருடைய அவருடைய கார்ட் தொடர்பான தகவல்கள் கேட்கப்படவே அனைத்தையும் வழங்கியுள்ளார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவரது கணக்கில் இருந்த ஒரு இலட்சம் இந்திய ரூபாய்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னரே தான் அழைப்பை ஏற்படுத்திய இலக்கம் தவறானது என்பதையும் அது ஒரு சைபர் மோசடிக்குரிய இலக்கம் என்பதையும் புரிந்துகொண்டார்.

பல நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்கள் இலகுவாக தொடர்புகொள்வதற்கான தகவல்களை கூகுளில் வழங்குகின்றனர்.

இதனை சாதகமாகப் பயன்படுத்தி சைபர் மோசடி செய்பவர்கள் அந்த நிறுவனங்களைப் போன்ற தோற்றத்தில் கணக்குகளை உருவாக்கி போலியான தகவல்களை கொடுத்து இவ்வாறு மோசடி செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.