சுற்றுலாப் பயணியை அழைத்துச்சென்ற காரொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மாத்தளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதிக்கு காரின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்போனதால் மாத்தளை – கலேவெல கலஹகெலே பிரதேசத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லொறி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மீது மோதி வீதிக்கருகில் இருந்த கால்வாய் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த ஜப்பானிய பிரஜையும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு நபர்களும் கலேவெல வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பல வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலங்க பெர்னாந்துவின் ஆலோனையின் கீழ்போக்குவரத்து பிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி ஹரிச்சந்திர மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்.





