வவுனியாவில் நேற்று(31.12) இரவு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன் முச்சக்கர வண்டியிலிருந்து வாள், கத்தி என்பன மீட்க்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
நேற்று இரவு 10.30 மணியளவில் கோவில்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்பகுதிக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனை செய்தபோது முச்சக்கரவண்டிக்குள் வாள், கத்திகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஆச்சிபுரம், எல்லப்பர்மருதங்குளத்தைச் சேர்ந்த 23,23,24 வயதுடைய மூவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





