வவுனியா – புதூர் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டொன்று காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இனந்தெரியாதோரால் புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கு செல்லும் பகுதியில் உள்ள புகையிரத கடவைக்கு அருகாமையிலேயே இவ் ஆயுதங்கள் கைவிடப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் நூறிற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு மற்றும் தேடுதலுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.









