கனிந்த காதல், கசந்தது திருமணம் : 10 மாதத்தில் புதுப்பெண் எடுத்த சோக முடிவு!!

282

புதுப்பெண் எடுத்த சோக முடிவு

ஆந்திராவில் இளம்பெண் ஒருவர் திருமணமான 10 மாதத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தூர் தாலுகா ஹிரேபண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா என்ற இளம்பெண் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது பக்கத்து கிராமத்தில் உள்ள நபரை காதலித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின்னரும் திவ்யா, ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தங்கள் மகள் சாவுக்கு அவளுடைய கணவரின் குடும்பத்தினர் தான் காரணம் என திவ்யாவின் பெற்றோர் புத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். பொலிசார் வழக்குப்பதிவு செய்து திவ்யாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.