தந்தைக்கு உதவியாக இருந்த 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : இளைஞரின் வெறிச்செயல்!!

797

தமிழ்நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தந்தைக்கு துணையாக இருந்த சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் 26-ம் திகதி விபத்தில் சிக்கிய நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்த நபருக்கு உதவியாக அவரது 10 வயது மகள் மருத்துவமனையில் இருந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனைக்கு எதிராக உள்ள பேக்கரி ஒன்றில் தன் தந்தைக்குத் தேவையானவற்றை அவ்வப்போது சிறுமி வாங்கினார்.

பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த சரவணன் என்பவர் அந்தச் சிறுமியிடம் பரிவாகப் பேசி அவரைப் பற்றிய விவரங்களை அறிந்துள்ளார். வழக்கம் போல் டீ வாங்கச் சென்ற அந்தச் சிறுமிக்கு தனது பணத்தில் பன் வாங்கிக் கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்குள்ள பழைய கழிப்பறைக்குக் கூட்டி செல்லப்பட்ட அந்தச் சிறுமியை சரவணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார்.

சிறுமியின் அலறலைத் தொடர்ந்து அங்கிருந்து சரவணன் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சரவணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.