3 வருடத்துக்கு பிறகே திருமணம் : சமந்தா!!

246

samanthaசித்தார்த்தும் சமந்தாவும் காதலிக்கின்றனர். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் சமந்தா தோல் அலர்ஜி நோயால் அவதிப்படுவதாகவும் இதனால் லிங்குசாமி இயக்கும் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கு சமந்தா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது..

நான் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஐந்து படங்கள் கைவசம் உள்ளன. எனவே திருமணத்தை பற்றி இப்போது சிந்திக்கவில்லை. 3 வருடங்கள் கழித்தே அதுபற்றி யோசிப்பேன். நடிகைகளுக்கு சினிமா வாழ்க்கை என்பது கொஞ்ச காலம்தான். இதில் சினிமா வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டு இருக்கிறது.

எனக்கு தோல் வியாதி ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி உள்ளன. உடல் நலம் குன்றியுள்ளதாகவும் சில தினங்கள் ஓய்வெடுக்க இருப்பதாகவும் டுவிட்டரில் தெரிவித்து இருந்தேன். உடனே தோல் வியாதி என வதந்தி பரப்பி விட்டார்கள்.

தற்போது ஐதராபாத்தில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் வி.வி.வினயன் படங்களில் நடித்துக் கொண்டு இருக்றேன். வருகிற 23ம் திகதியில் இருந்து சூர்யா படத்தில் நடிக்க உள்ளேன் இவ்வாறு சமந்தா கூறினார்.