எனக்கு குழந்தை இருப்பதாக அவதூறு பேசுவதா : நடிகை ராதா ஆவேசம்!!

270

Radhaதொழில் அதிபர் பைசூல் திருமணம் செய்வதாக தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் 50 லட்சம் பணம், நகைகளை அபகரித்து கொண்டதாகவும் நடிகை ராதா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். போலீசிலும் புகார் அளித்தார்.

இதையடுத்து பைசூல் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகி கோர்ட்டில் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். ராதா குற்றச்சாட்டுகளை பைசூல் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது..

நடிகை ராதா என்மேல் பொய் புகார்களை கூறி வருகிறார். ஆனால் என்னை குற்றவாளியாக்கும் எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை. ராதா வாழ்க்கையில் பல ரகசியங்கள் உள்ளது. அவற்றை நான் வெளியிடுவேன். பண மோசடி செய்ததாக ராதா கூறியுள்ளார்.

அதில் உண்மை இல்லை. நிஜத்தில் நான்தான் அவரிடம் ஏமாந்தேன். 80 லட்சத்துக்கும் மேல் ஏமாந்து இருக்கிறேன். ராதாவுக்கு எதிராக போட்டோ ஆதரங்கள் என்னிடம் உள்ளன. முன் ஜாமீன் கிடைத்ததும் உண்மைகளை வெளிச்சப்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

ராதாவுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து கேட்ட போது அவர் மறுத்தார். ராதா கூறியதாவது..

பைசூல் அடிக்கடி என்னை சந்தித்து ஆசை வார்த்தைகள் கூறி நட்பானார். உங்களின் பைத்தியக்கார ரசிகன் என்றார். உங்களை வைத்து படம் எடுக்கப் போகிறேன் என்றார். திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார். நான் நம்பினேன்.

2008 முதல் 2013 வரை என்னுடன் வாழ்ந்தார். என் இளமையை ஐந்தாண்டுகள் பாழடித்தார். செக்ஸ் டார்ச்சர் செய்தார். குடித்து வந்து அடித்து உதைத்தார். கொலை மிரட்டல் விடுத்தார். குழந்தை இருப்பதாக அவதூறு பேசுகிறார்கள். இதை சட்டப்படி சந்திப்பேன். என் சாபம் பைசூலை நிம்மதியாக வாழவிடாது. பைசூலை பற்றிய ரகசியங்களை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.