படப்பிடிப்பில் ஹன்சிகாவிடம் ரசிகர்கள் ரகளை : கையை பிடித்து இழுத்ததால் பரபரப்பு !!

304

Hansikaஹன்சிகா உயிரே உயிரே என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. அங்கு ஹன்சிகா பங்கேற்ற பாடல் காட்சியொன்றை படமாக்கினர். அப்போது படப்பிடிப்பை காண அங்கு பெரும் கூட்டம் கூடியது.

கடற்கரையில் ஹன்சிகா ஆடிக்கொண்டு இருந்தபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். ஹன்சிகாவோடு சேர்ந்து நின்று போட்டோ எடுக்க முண்டியடித்தார்கள். சிலர் அத்துமீறி ஹன்சிகா கையை பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்டனர்.

ரசிகர்கள் பிடியில் சிக்கி ஹன்சிகா தவித்தார். போலீசாரும் பாதுகாவலர்களும் விரைந்து சென்று ரசிகர்களை விரட்டியடித்து ஹன்சிகாவை மீட்டனர். பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். ரசிகர்கள் கலாட்டாவினால் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது உயிரே உயிரே படத்தின் பாடல் காட்சியொன்றை கோவா கடற்கரையில் மாலை 4 மணிக்கு படமாக்கினார். நான் அதில் நடித்துக் கொண்டு இருந்தபோது கூட்டத்தினர் கட்டுப்பாட்டை மீறி என்னை சூழ்ந்தனர். கோவாவில் யாருக்கும் என்னை அடையாளம் தெரியாது என்று நினைத்து நடித்து கொண்டு இருந்தேன்.

தென் இந்திய படங்களில்தான் நிறைய நடித்து இருக்கிறேன். ஆனால் குழந்தை நட்சத்திரமாக டி.வி தொடர்களில் நிறைய நடித்து இருந்ததால் அவர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு என் பெயரை சொல்லி கூச்சல் போட்டனர்.

பாதுகாவலர்கள், போலீசார் இருந்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லை மீறினார்கள். இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு என்னை ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு படப்பிடிப்பு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது என்றார்.