உயிருடன் எரித்து கொல்லப்பட்ட நாய் : ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிப்பு!!

834

 

உயிருடன் எரித்து கொல்லப்பட்ட நாய்

உயிருடன் நாய் ஒன்று எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நாளை மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. Save a Pet With Love என்ற மிருகங்களை பாதுகாக்கும் அமைப்பால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு – கொப்பரவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வளர்த்துவரப்பட்ட, சாலி என்ற பெயருடைய நாயொன்றை, அடையாளம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர்.

உயிருடன் எரிந்துகொண்டிருந்த நாயை சமூக ஆர்வலர்கள் சிலர் மீட்டு கால் நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த நாய் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நாளை (04) நீர்கொழும்பு பிரதேசத்தில், மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும், மிருகங்களை பாதுகாக்கும் அமைப்புக்கள் அனைத்துக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த நாயை இவ்வாறு தீயிட்டு கொழுத்திய நபர் பற்றி தகவல்கள் தெரியவருமாயின், உடனடியாக அறிவிக்கும்படியும், குறித்த நபரை கண்டுபிடிக்க உதவி செய்யும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படுமென்றும் அறிக்கப்பட்டுள்ளது.

save a pet with love அமைப்பால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.