ஜனாதிபதி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து குறுஞ்செய்தி : தகவல் கோரும் ஊடகவியலாளர்!!

597

2019ஆம் ஆண்டுக்கு வாழ்த்து தெரிவித்து, ஜனாதிபதி மக்களின் செல்போன்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி தொடர்பான தகவல்களை கோரி ஊடகவியலாளர் ஒருவர், ஜனாதிபதி செயலகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளார்.

ஜனாதிபதி அனுப்பிய வாழ்த்து செய்தி, அதனை பொதுமக்களுக்கு அனுப்பிய தொலைப்பேசி நிறுவனங்களுக்கு பணம் செலுத்தப்பட்டதா அல்லது நிறுவனங்கள் அதனை இலவசமாக வழங்கியதா என்பதை உறுதிப்படுத்துமாறு ஊடகவியலாளர் சம்பத் சமரகோன் தனது விண்ணப்பத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டு மக்களின் தொலைப்பேசி இலக்கங்கள் ஜனாதிபதிக்கு கிடைத்தமையானது அவர்களின் தனித்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் ஜனாதிபதியின் குறுஞ்செய்திக்கு பதிலளிக்க முடியாத வகையில் அது அனுப்பப்பட்டிருந்தமை ஒழுக்கநெறி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சம்பத் சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.