தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண விருது வழங்கும் விழா இன்று (06.01) மதியம் 3 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் மன்றத்தின் பணிப்பாளர் என்.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் எம்.கனீபா கலந்துகொண்டிருந்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வன்னி பிராந்தியத்தில் நடாத்தபட்ட இயல், இசை, நாடகம், பாட்டு, அறிவிப்பு ஆகிய கலைகளில் பங்குபற்றி போட்டிகளில் வெற்றிபெற்ற 177 இளைஞர்களிற்கான விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றிருந்ததுடன், விருது நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகளால் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர். எஸ்.மயூரன், நகரசபை உறுப்பினர்களான எஸ்.காண்டீபன், க.சந்திரகுலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.