காதல் விவகாரத்தால் 16 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு : மட்டக்களப்பில் நேர்ந்த சோகம்!!

894

 

சிறுமி எடுத்த விபரீத முடிவு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை அண்மித்துள்ள வாவியில் கரையொதுங்கிய நிலையில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த நிலையில் தேடப்பட்டு வந்துள்ளார்.

அவரை தேடும் பணியில் மீனவர்கள், உறவினர்கள், கடற்படையினர், பொலிஸார் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையிலேயே இன்று காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி – பூநொச்சிமுனை 2ஆம் குறுக்கு வீதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கிருஷாந்தினி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி காதல் விவகாரம் தொடர்பில் மன விரக்திக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

மேலும், சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.