கிளிநொச்சியில் கோர விபத்து : மூவர் பரிதாபமாக பலி!!

691

 

கோர விபத்து

கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இராணுவ ரக் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று பேரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்றுபேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் பளைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தையைச் சேர்ந்த குகன் என்பவரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை பளைப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.