வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் கிராமசேவையாளர் காயம்!!

353

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த முன்னாள் கிராமசேவையாளர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியின் கிராம அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் வேப்பங்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த சமயம் நேற்றைய தினம் இரவு 8.30 மணியளவில் மோட்டர் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் அவரிடம் ஒரு நபரின் பெயரைக் கூறி அவர் நிற்கின்றாரா என வினவியபோது, அப்படியொருவர் இங்கு இல்லை என முன்னாள் கிராம அலுவலர் கூறிய போது குறித்த இருவரும் வீட்டிற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.

இதன் போது கிராமசேவையாளர் வீடடின் கதவை சாத்தியுள்ளார்.
இதனையடுத்து கதவின் மீது குறித்த நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 60 வயதுடைய சற்குணசேயோன் பாலசுந்தரி என்ற முன்னாள் கிராம சேவையாளர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலையடுத்து துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1

2