வவுனியா நகரின் மத்தியில் தோண்டப்பட்ட குழியினால் அப்பகுதியில் பதற்றநிலை!!

620

பதற்றநிலை

வவுனியா நகரின் மத்தியில் நேற்றிரவு (08.01.2019) தோண்டப்பட்ட குழியினால் அவ்விடத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மற்றும் நகரசபையினரால் குழி தோண்டும் நடவடிக்கை நிறுத்துவப்பட்டுள்ளது.

வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே நேற்றிரவு சிலரால் எம்.ஜி.ஆர் சிலை வைக்கும் நோக்கோடு அவ்விடத்தில் பாரிய குழியொன்று தோண்டப்பட்டது. இதனையடுத்து அவ்விடத்தில் ஒன்றுகூடிய இளைஞர்களினால் குழி தோண்டும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் இன்று (09.01.2018) காலை குழி தோண்டும் நடவடிக்கையினை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நகரசபையினர் மற்றும் பொலிஸார் குழியினை மூடுமாறு பணித்ததுடன் உரிய அனுமதியினை பெற்று சிலை வைக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பணித்தனர்.

இதனையடுத்து தற்போது தோண்டப்பட்ட குழியினை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

நகரசபையின் அனுமதியின்றியே அவ்விடத்தில் சிலை வைக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளது. எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் அந்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.