வவுனியா நகர திடீர் மரணவிசாரணை அதிகாரியாக ஹரிபிரசாத் பதவியேற்பு!!

929

வவுனியா தாண்டிகுளத்தில் வசித்துவரும் கருணாநிதி ஹரிபிரசாத் இன்று (09.01) காலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகம்மட் ரியால் முன்னிலையில் வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்புக்கும் சட்டத்திற்கும் இணங்க பற்றுறுதியோடு பணியாற்றுவேன் என்றும் இலங்கை குடியரசுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றும் எனது திறமைக்கு இயன்றவரை இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றிக் காப்பேன் என்றும் உறுதி செய்கின்றேன் என கருணாநிதி ஹரிபிரசாத் திடீர் மரண விசாரணையாளராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.