சினிமா பாணியில் அதிரடியாக செயற்பட்ட மக்களால் வசமாக மாட்டிய திருடன்!!

256

 

வசமாக மாட்டிய திருடன்

ஹட்டனில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற திருடனை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று துரத்திப்பிடித்துள்ளனர்.

ஹட்டன் நீதிமன்ற வீதியில் நோர்வூட் பிரதேச சபையின் பிரதான குமாஸ்தாவின் கழுத்தை நெறித்து தங்கச் சங்கலியினை அபகரித்து சென்ற வேளையில் பிடிபட்டுள்ளார். குறித்த பெண் தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது பின்தொடர்ந்த நபர் அவரது தங்கச் சங்கிலியினை அபகரித்து சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஹட்டன் டிக்கோயா நகரசபையின் காவலாளி மற்றும் பிரதேசவாசிகள் ,பொலிஸார் ஆகியோர் இணைந்து திருடனை துரத்திப் பிடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தங்கச்சங்கிலி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் போது பெண்னின் கழுத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பத்தனை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் எனவும், கொழும்பு பகுதியில் தரகர் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.