கொழும்பில் திடீரென முச்சக்கர வண்டி ஒன்று தீ பற்றி எரிந்தமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று மாலை குறித்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
எனினும் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி முழுமையாக தீப்பற்றிய பின்னரே தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





