அஜித்தின் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்!!

500

 

தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்

இன்று நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் தந்தையை மகன் எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டியன் என்பவரிடம் அவரது மகன் அஜித்குமார் விஸ்வாசம் படம் பார்க்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதற்கு தந்தை மறுத்துள்ளார், இதனால் கோபம் கொண்ட அஜித்குமார், தூங்கிக்கொண்டிருந்த போது பெட்ரோல் ஊற்றி எரித்ததில் படுகாயம் அடைந்த பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.