வடமாகாண பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை!!

430

திங்கட்கிழமை விடுமுறை

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த சிறப்பு விடுமுறைக்கான கட்டளையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

ஜனவரி 15ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான தைப் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு 14ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கும் விடுமுறையினை வழங்குவதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழங்கியுள்ளார். இந்த விடுமுறைக்கான பதில் பாடசாலை தினம் பின்னர் அறிவிக்கப்படும்.