இலங்கையில் நடந்த பயங்கரம்
தனிப்பட்ட குரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் அம்பலாந்தோட்டை பகலபெரகம பிரதேசத்தில் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கருத்து முரண்பாட்டின் காரணமாக அம்பலந்தொட – அரவனமுல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அம்பலந்தொட – பகலபெரகம – அரவனமுல்ல பிரதேசத்தினை சேர்ந்த 56 வயதுடைய இரு பிள்ளகைளின் தந்தையே தனது மகனின் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதுடன், தாயையும் தாக்கி, தாயின் முடியை வெட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 35 வயதுடைய சந்தேக நபரான மகன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
பூச்சாடி ஒன்றினால் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொலையுடன் சம்பந்தப்பட்ட மகன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.








