வவுனியாவில் கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு!!

407

 

மாணவியின் சடலம் மீட்பு

வவுனியா பூவரசங்குளம் தாலிக்குளம் பகுதியில் நேற்று (13.01.2019) மாலை கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. தாலிக்குளம் பகுதியில் வீட்டிலுள்ள பாதுகாப்பற்ற தோட்டக்கிணற்றில் பாடசாலை உடைகளை துவைப்பதற்காக தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த சமயத்தில்,

தவறுதலாக கிணற்றினுள் வீழ்ந்து 15 வயதுடைய சொக்கலிங்குமார் லோபிகா என்ற பாடசாலை மாணவி மரணமடைந்துள்ளார். குறித்த மாணவியின் பெற்றோர் பிள்ளையினை காணவில்லை என தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதினையடுத்து பொலிசார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.