முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!!

303

indமுதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 141 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வீழ்த்தியுள்ளது. 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது.

இரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா மழைக்குரிய வானிலை மற்றும் இரவில் பனியின் தாக்கம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தனர். இதனை அடுத்து தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களைக் குவித்தது.

தென்னாபிரிக்கா சார்பில் கியிண்டன் டி கோக் 135 ஓட்டங்களையும், வில்லியஸ் 77 ஓட்டங்களையும், அம்லா 65 ஓட்டங்களையும் விலாசியதோடு, டுமினி 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 41 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 217 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதனால் தென்னாபிரிக்கா 141 ஓட்டங்களால் இந்தியாவை வீழ்த்தியது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இந்தியா சார்பில் டோனி 65 ஓட்டங்களை எடுத்தார்.