தலவாக்கலை, தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீயினால் 2 ஏக்கரிற்கு மேற்பட்ட பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் தீப்பரவல் இன்று காலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் நிலவிவரும் கடும் வெயில் மற்றும் கடும்காற்று காரணமாக தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தலவாக்கலை பொலிஸாரும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும், இராணுவத்தினரும் பொதுமக்களும் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்ப்பாசன வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் மேலும் நீர்த்தட்டுப்பாடு உக்கிர நிலையை அடைய வாய்ப்பிருப்பதாகவும், ஆகவே தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.















