நாய் துஸ்பிரயோகம்
இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் நாய் ஒன்றை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று பலாங்கொடை நீதவான் ஜயருவான் திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகியிருக்கவில்லை. சந்தேக நபரை மனநல மருத்துவரின் பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
50 வயதான சந்தேக நபர் கடந்த 14 ஆம் திகதி 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான, மூன்று மாத பொமனேரியன் நாய்க் குட்டியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி இரவு சந்தேக நபரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்க் குட்டியை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறந்த நாயின் சடலத்தை பலாங்கொடை கால்நடை மருத்துவரிடம் அனுப்பி அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








