கொன்றுவிடு என கூறிய காதலி : பிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்!!

592

 

மனைவியை கொலை செய்த கணவன்

மும்பை பாந்ராவில் காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக முதல் மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சல்மான் ஷேக் என்பவருக்கு ஆயிஷா என்ற பெண்ணுடன் 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு தன்னுடன் வேலைபார்க்கும் ஜாஸ்மின் என்ற பெண்ணுடன் சல்மானுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மாறியது. ஜாஸ்மினை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நிலையில், இதற்கு மனைவி ஆயிஷா இடையூறாக இருந்துள்ளார்.

இதனால், தனது பிஞ்சு குழந்தைகளின் முன்பு மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். இதற்கு காதலி ஜாஸ்மினும் உதவி செய்துள்ளார்.

மனைவியை கொலை செய்துவிட்டு ஜாஸ்மினை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். பிள்ளைகள் அவர்களது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், ஆயிஷாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சல்மான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், சல்மான் கொலை செய்தது உறுதியானதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.