மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய பின் தற்கொலை செய்த நபர்!!

509

 

தற்கொலை செய்த நபர்

நபரொருவர் தனது மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய பின்னர் தானும் உடம்பில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் மாத்தறை – கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறே இந்த கொலைக்கு காரணமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் கம்புறுபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்த நபர் 42 வயதுடையவர் எனவும், மனைவி 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.