லண்டன், ஹறோ பகுதியில் உள்ள பல்லின மக்களினால் தைப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
இவ்விழா நேற்று முன்தினம் லண்டன் பாபா சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் ஹறோ தமிழ் கொமினிட்டி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இவ்விழாவில் ஹறோ கவுன்சில் தலைவர் மற்றும் பலர் உரையாற்றியுள்ளனர். அத்துடன் இந்நிகழ்வில் பெண்கள் செம்மொழி பாடலுக்கு நடனமாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















