தாக்குதல் நடத்திய பெண்கள்
மட்டக்களப்பு, ஏறாவூரில் வீடொன்றுக்குள் பெண்கள் உட்புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டிற்குள் உட்புகுந்த இரு பெண்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு வீட்டின் ஜன்னல் மற்றும் பொருட்களையும் சேதமாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதலினால் படுகாயமடைந்த குழந்தையும், தாயும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட தகராறே இத்தாக்குதலிற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










