இலங்கை வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை!!

834

 

வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை

பாரிய தவறுகளை மேற்கொள்ளும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை அதிகரிப்பதற்கு எதிர்வரும் சில வாரங்களில் செயற்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அபராதத்திற்கு மேலாக அவர்களின் சாரதி அனுமதி பத்திரத்தையும் இரத்து செய்வதற்கு தேவைய சட்டத்தை எதிர்வரும் காலத்தில் அமுல்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.