குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் : விசாரணையில் அம்பலமான உண்மை!!

1166

 

அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் சொத்துக்காக ஒரு குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் யேசுராஜன் (70). இவருடைய மனைவி கலா. இந்த தம்பதியினருக்கு ஜெனிபர் என்கிற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சொத்து விவகாரம் தொடர்பாக கலாவின் தம்பி கோபால், யேசுராஜனிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார். அதற்கு யேசுராஜன் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த கோபால் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே யேசுராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பின்னர், கோபாலை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சொத்துக்கு ஆசைப்பட்டு குடும்பமே சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கலா, அவருடைய தங்கை டெய்சி, ஏசுராஜனின் மகள் ஜெனிபர் அவரது கணவர் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.