தொழில்நுட்ப புரட்சி
இலங்கையில் செயற்கை மழைத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வரட்சி நிலை ஏற்படுகையில் நீர்மின்வலு உற்பத்தி சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் செயற்கை மழைத் திட்டம் அமுலாகிறது. இதனை மின்வலு மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சு நடைமுறைப்படுத்துகிறது.
தாய்லாந்து அரசாங்கம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை மழை பெய்யச் செய்யும் திட்டங்களை அமுலாக்குகிறது.
இந்த விடயத்தில் தாய்லாந்தின் தொழில்நுட்ப அறிவைப் பெறுவது புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாகும். இதில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
இலங்கை மின்சார சபையின் செயலாளர் கலாநிதி வி.என்.எஸ்.பட்டகொட, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோர் கைச்சாத்திட்டார்கள். இதன் போது அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் உடனிருந்தார்கள்.






