கொழும்பிலிருந்து தப்பியோடிய வெளிநாட்டவர்கள் : அதிர்ச்சியில் பொலிஸார்!!

663

இலங்கையில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வெளிநாட்டு தம்பதியொன்று தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள சொகுசு வீடு ஒன்றில் 100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம மேற்கொண்ட விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய இந்த போதைப்பொருள் நடவடிக்கையினை முன்னெடுத்துச் சென்றவர்கள் துருக்கியை சேர்ந்த தம்பதியர் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த வௌநாட்டு தம்பதி நீண்ட காலமாக இலங்கையில் தங்கயிருந்து பாரிய ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வித சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல் இந்த வர்த்தகத்தை நடத்தி செல்வதற்காக துருக்கி நாட்டு தம்பதியினர் அமெரிக்கர்களை தொடர்புப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் களஞ்சிய அறையை நடத்தி செல்வதற்கு கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு வீட்டிற்கு மாத வாடகையாக இரண்டரை லட்சம் ரூபாய் செலுத்தி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களாக இந்த தம்பதி தற்பொது கொழும்பை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சூட்சுமமான முறையில் இலங்கையில் பதுங்கியிருந்து பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்