தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்!!

1106

 

கத்தியால் குத்தி கொலை

றாகமை – மெத்தேகொட பகுதியில் தனது மனைவியை கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே நேற்றைய தினம் ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கனேமுல்ல பகுதியை சேர்ந்த 35 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த சந்தேக நபரை காவல்துறை கைது செய்துள்ளது.